துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
இலங்கை தமிழரான முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர். இவரது வாழ்க்கையை 800 என்ற பெயரில் படமாக்க முயற்சிகள் நடந்தது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. விஜய்சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான போட்டோ ஷூட் நடத்தப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
முத்தையா முரளிதரன் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் குடும்ப நண்பர். தமிழர்களுக்கு எதிரானவர் அவரது வாழ்க்கை படத்தில் நடிக்க கூடாது என்று சில அமைப்புகள் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகிக் கொண்டார். படமும் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளனர். விஜய் சேதுபதிக்கு பதிலாக ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் அறிமுகமாகி இப்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தேவ் படேல் நடிக்கிறார் என்றும் அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரிபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்ற தெரிகிறது.