புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
இலங்கை தமிழரான முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர். இவரது வாழ்க்கையை 800 என்ற பெயரில் படமாக்க முயற்சிகள் நடந்தது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. விஜய்சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான போட்டோ ஷூட் நடத்தப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
முத்தையா முரளிதரன் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் குடும்ப நண்பர். தமிழர்களுக்கு எதிரானவர் அவரது வாழ்க்கை படத்தில் நடிக்க கூடாது என்று சில அமைப்புகள் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகிக் கொண்டார். படமும் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளனர். விஜய் சேதுபதிக்கு பதிலாக ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் அறிமுகமாகி இப்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தேவ் படேல் நடிக்கிறார் என்றும் அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரிபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்ற தெரிகிறது.