போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் கேபி. தற்போது விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே' சீசன் 2 வில் கதாநாயகியாக இருக்கிறார். சிறந்த நடன கலைஞராக இருக்கும் கேபி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் நடிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் கேபியுடன் கமெண்டில் பேசிய ஒருவர், 'நீங்கள் சினிமாவில் நடிக்கலாமே, ஏன் சீரியல் மாதிரியான சின்ன ஊடகத்தில் நடிக்கிறீர்கள்' என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கேபி, 'சீரியலை சின்ன விசயமாக நினைக்கவில்லை. சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ, ஒரு நடிகராக நாம் பணியில் சிறப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று விசிட் செய்யும் சின்னத்திரை ஒன்றும் சின்ன விசயமல்ல' என்று பதில் கூறியுள்ளார்.
அதே கேள்வியை மீண்டும் ஒரு ரசிகர் கேட்க, கடுப்பான கேபி, 'இன்னொருவரும் இதே கேள்வியை கேட்டாலோ, இதுகுறித்து சிரித்தாலோ, உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா? உங்க வேலைய பத்தி நான் கமெண்ட் பன்றேனா? வாழ விடுங்க' என காட்டமாக பதில் அளித்துள்ளார்.