தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

பிரபல நடிகை கேப்ரில்லா சார்ல்டன். குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையிலும், சினிமாவிலும் அறிமுகமானார். பிக்பாஸ் என்ட்ரிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2வில் ஹீரோயினாக நடித்தார். தற்போது சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க கேப்ரில்லாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அண்மையில் கேப்ரில்லா அளித்துள்ள பேட்டியில் சிறு வயதில் நடிக்க வந்த புதிதில் தனக்கு நிகழ்ந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், 'நான் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது என்னுடைய புகைப்படத்தை யாரோ தவறாக மார்பிங் செய்து வெளியிட்டார்கள். அந்த புகைப்படத்தில் இருப்பது நானே கிடையாது. ஆனால், புதிதாக பார்ப்பவர்கள் அது நான் தான் என்று நினைப்பார்கள். அந்த சமயத்தில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். பள்ளியில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். இதனால் மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அந்த சம்பவத்திலிருந்து வெளியே வருவதற்கே எனக்கு சில நாட்கள் ஆனது' என்று கூறியுள்ளார்.




