ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

2012ம் ஆண்டு வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன்பிறகு கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மஞ்சப்பை, மிருதன் உள்பட பல படங்களில் நடித்தார்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. திடீரென அவருக்கு வாய்ப்புகள் நின்று போனது. பிரபு தேவாவுடன் நடித்துள்ள யங் மங் சங் படம் வெளிவரவில்லை. கடைசியாக புலிக்குத்தி பாண்டி படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்திருந்தார். இதுவும் தொலைக்காட்சியில் வெளியானது.
இந்த நிலையில் லட்சுமி மேனன் சத்தமின்றி நடித்துள்ள படம் ஏஜிபி. ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் தான் இந்தப் படம். இப்படி மூன்று பாத்திரங்கள் உள்நுழைந்து பாதிப்புக்குள்ளாகும் பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார் என்றார்.
இப்படியான ஒரு கேரக்டரில்தான் அந்நியன் படத்தில் விக்ரம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




