உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் |
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நரேன், அதைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும், பின்னர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களிலும் கூட நடித்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான கைதி படத்தில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கிய நரேன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் இணைந்து விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மலையாளம், தமிழ் என இரு மொழியில் உருவாகியுள்ள படத்தில் பிரைவேட் டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நரேன். மலையாளத்தில் இந்தப்படத்திற்கு அதிர்ஷ்யம் என பெயர் வைக்கப்பட்டு அந்தப்படத்தின் டிரைலரும் தற்போது வெளியாகியுள்ளது.
அதேசமயம் இதன் தமிழ்ப்பதிப்பில் நட்டி மற்றும் கதிர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மலையாளத்தில் இதே கேரக்டர்களை ஜோசப் புகழ் ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிரேமம் புகழ் ஷராபுதீன் இருவரும் ஏற்று நடித்திருக்கின்றனர். இரண்டு மொழிகளுக்கும் பொதுவான கதாபாத்திரங்களில் நரேன், ஜான்விஜய், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் நடிக்கின்றனர்.