வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? |
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் விஜய் அறிமுகமான படம் நாளைய தீர்ப்பு. இது எல்லோரும் எளிதில் சொல்லி விடுவார்கள். இதே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தனா. விஜய்யுடன் இணைந்ததை அடுத்து அஜித்துடன் பவித்ரா பட த்தில் இணைந்து நடித்தார்.
பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்யுடன் நடிக்க 31 பேர் ஆடிஷனுக்கு வந்து தேர்வாகவில்லை. 32 வது ஆளாக போன நான் தேர்வானேன். மறுபடியும் விஜய், அஜித்துக்கு பிளாஷ்பேக் ஹீரோயினா நடிக்க வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் பண்ணுவேன். திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு காத்திருக்கிறேன். நல்ல கதைக்களம் அமைஞ்சா நிச்சயம் சினிமாவிலும் ரீ-என்ட்ரி தான்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.