60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி |
பொதுவாக தமிழகத்தில் பொங்கல் ரிலீஸ் என்பது தமிழ் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் வெளியீட்டு கொண்டாட்டமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக பான் இந்திய ரிலீஸ் என்கிற பெயரில் மற்ற மொழிகளில் உருவாக்கப்பட்ட படங்களும் கூட இங்கே பண்டிகை தினங்களில் வெளியாகி கல்லா கட்ட துவங்கியுள்ளன. அந்தவகையில் ஆர்ஆர்ஆர்(ஜன., 7), ராதே ஷ்யாம் படம் இந்த பொங்கல் பண்டிகையில் ரிலீஸாவதாக இருந்தன.
ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கே அனுமதி என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்ஆர்ஆர் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியுள்ளன. ஏற்கனவே தமிழில் அஜித்தின் வலிமை மட்டுமே பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கபட்டிருந்த நிலையில் தற்போது விஷாலின் வீரமே வாகை சூடும் படமும் பொங்கல் பண்டிகை ரிலீஸாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக இந்தப்படம் ஜன-26ல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆர்ஆர்ஆர் படம் பின்வாங்கியதால் அவற்றுக்கான தியேட்டர்களில் பாதி, வலிமைக்கு சென்றாலும் மீதியுள்ள தியேட்டர்கள் கிடைத்தாலே அதை வைத்தே விஷாலின் வீரமே வாகை சூ(டிவி)டும். இப்படித்தான் தீபாவளியின்போது அண்ணாத்த படத்துடன் தனது எனிமி படத்தையும் துணிந்து ரிலீஸ் செய்தார் விஷால்.