'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இதனிடையே, ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சில தெலுங்கு மீடியாக்களில் இப்படத்தை ஓடிடி தளத்தில் 'பணம் செலுத்தி பார்க்கும் முறை' மூலம் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின. அவற்றை படக்குழு மறுத்துள்ளதாம்.
திட்டமிட்டபடி ஜனவரி 7ம் தேதி படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்களாம். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வியாபாரமும் மிகப் பெரும் அளவில் நடந்துள்ளது.
இன்று மாலை சென்னையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.




