ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

இந்தியத் திரையுலகின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. தமிழில், “அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா, சிங்காரவேலன்' உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
பாவலர் கிரியேஷன்ஸ் என்ற அந்த நிறுவனம் சார்பில் திரைப்படங்களைத் தயாரித்து 30 ஆண்டு காலம் ஆகிவிட்டது. சமீப காலமாக இளையராஜாவும், ரஜினிகாந்தும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரஜினியிடம், தனது நிறுவனத்துக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டதாகவும் அதற்கு ரஜினி சம்மதம் சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இளையராஜா மீது மிகுந்த அபிமானம் கொண்டு பாலிவுட் இயக்குனரான பால்கி, ரஜினியை சந்தித்து கதையைக் கூறியதாகவும், அந்தக் கதையும் ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படத்தை ஹிந்தியில் தயாரிக்கலாமா, தமிழில் தயாரிக்கலாமா என்று பேசப்பட்டு வருகிறதாம். விரைவில் அது பற்றி முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.




