பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டத்தில் கூட அவர் நடித்த கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது இந்தியில் அவர் நடித்துள்ள அட்ராங்கி ரே படம், தமிழில் கலாட்டா கல்யாணம் என்கிற பெயரில் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அடுத்து அவர் தமிழ், தெலுங்கில் நடிக்க உள்ள படத்திற்கு வாத்தி என்கிற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் கூட அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தனுஷ். அதிலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே குறிப்பிட்டு புருவங்களை உயர வைத்துள்ளார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி படம் நேற்று வெளியாகியுள்ளது. அவர் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக்காயிதம் படம் விரைவில் வெளியாகவுள்ளது.