பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டத்தில் கூட அவர் நடித்த கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது இந்தியில் அவர் நடித்துள்ள அட்ராங்கி ரே படம், தமிழில் கலாட்டா கல்யாணம் என்கிற பெயரில் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அடுத்து அவர் தமிழ், தெலுங்கில் நடிக்க உள்ள படத்திற்கு வாத்தி என்கிற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் கூட அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தனுஷ். அதிலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே குறிப்பிட்டு புருவங்களை உயர வைத்துள்ளார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி படம் நேற்று வெளியாகியுள்ளது. அவர் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக்காயிதம் படம் விரைவில் வெளியாகவுள்ளது.