ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‛நானே வருவேன்'. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய யாமினி விலகி விட்டார். இவர் தான் செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இதுப்பற்றி யாமினி கூறுகையில், ‛‛செல்வராகவன் மற்றும் 'நானே வருவேன்' படக்குழுவுடன் பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த படத்திலிருந்து விலகுகிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். உங்கள் ஆதரவுக்கு நன்றி'' என்றார்.