புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் கமிட்டாகி நடித்து வந்தார் வடிவேலு. ஆனால் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பிறகு கதையில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று வடிவேலு சொன்னதை அடுத்து அவருக்கும் டைரக்டர் சிம்புதேவனுக்கு மிடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்றது. அதன்பிறகு இரு தரப்பிலும் நடந்த விசாரணைக்கு பிறகு வடிவேலுவுக்கு மறைமுக ரெட் கார்டு போட்டு வைத்திருந்தார்கள். இதனால் வடிவேலுவை புதிய படங்களுக்கு யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் டைரக்டர் ஷங்கர் வடிவேலுவுக்கு இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில் ரெக்கார்டு நீக்கப்பட்டது. இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அதோடு சில நாய்களுடன் வடிவேலு போஸ் கொடுக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாள் வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி இருக்கிறார் சுராஜ். இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். அவை வைரலாகின.