கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். அப்பா சுரேஷ் குமார் தயாரிப்பாளர், அம்மா மேனகா நடிகை. கீர்த்தி சுரேஷை ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டும் வீடியோ ஒன்று கேரளாவில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலின் கவனத்துக்கு சென்றது. உடனடியாக அவர் அதை கீர்த்தியின் தந்தை சுரேசஷ் குமாருக்கு அனுப்பி, இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் டிஜிபி அவலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் கூறியிருப்பதாவது: என் மகள் கீர்த்தி சுரேஷ் நடித்த மரைக்காயர் படத்தை தோல்வியடையச் செய்வதற்காக ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் அந்த படம் குறித்து மோசமான கருத்துகளை பரப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் அந்த படத்தில் சிறப்பாக நடித்த என் மகள் கீர்த்தி சுரேஷ் குறித்து ஆபாசமாக திட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து நான் போலீசில் புகார் அளித்துள்ளேன். குற்றவாளியை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர். என்றார்.