ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
2017ம் ஆண்டு சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்ட னர். நான்கு ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண உறவு சமீபத்தில் முறிந்தது. சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், நாக சைதன்யாவை பிரிந்து செல்ல முடிவெடுத்தபோது நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு, விவகாரத்துக்கு சென்றால் நான் மனம் நொறுங்கி இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். அந்த அளவுக்கு என்னை பலவீனமானவள் என்று கருதி வந்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.
நான் ரொம்ப வலிமையுடனும் மன உறுதியுடனும் இருக்கிறேன். இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று கருதவில்லை. நான் வலிமையாக இருக்கிறேன் என்பதை நினைக்கையில் ரொம்ப பெருமையாக உள்ளது எனறு தெரிவித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தில் முதன்முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள சமந்தா, தற்போது கதையின் நாயகியாக நடிக்கும் யசோதா என்ற ஐந்து மொழிப் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சர்வதேச படமான அரேஞ்மென்ட்ஸ் ஆப் லவ் என்ற படத்திலும் நடிக்கப்போகிறார்.