மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மாநாடு. டைம் லூப் கதையில் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் துவங்கியதில் இருந்து பல்வேறு பிரச்னைகளை கடந்து வளர்ந்து வந்த இந்த படம் ஒருவழியாக வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது.
தீபாவளிக்கு படம் வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் ரஜியின் அண்ணாத்த படம் அநேக தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால் இந்த படம் அப்போது வெளியாகவில்லை. மாறாக நாளை(நவ.,25) இப்படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். தியேட்டர்களுக்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வந்தது.
இந்நிலையில் கடைசிநேரத்தில் இந்த படம் தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என தெரிவித்தார்.
சிம்புவின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது என மாநாடு படத்தின் முன்பதிவிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம் படத்தை வெளியிட பல தரப்பினர் பேசி வந்தனர். இறுதியாக இரண்டு முக்கிய நபர்கள் தலையிட்டு இந்த பிரச்னையில் சமரசம் செய்தனர். இதையடுத்து மாநாடு படம் நாளை(நவ.,25) திட்டமிட்டப்படி வெளியாகிறது. இதை ரசிகர்கள் கொண்டாடினர்.
தொடரும் சிம்பு பட சோகம்
சிம்புவின் ஒவ்வொரு படமும் கடைசிநேரத்தில் ஏதாவது ஒரு சிக்கலை சந்தித்து கொண்டே இருக்கிறது. வாலு தொடங்கி இப்போது நாளை வெளியாக மாநாடு வரை ஒவ்வொரு படமும் இதுபோன்று சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
கடவுள் இருக்காரு
மாநாடு படம் சிக்கல் தீர்ந்தது தொடர்பாக வெங்கட்பிரபு ‛‛கடவுள் இருக்காரு'' என தெரிவித்தார். அதோடு அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. மாநாடு நாளை 25ம் தேதி வெளியாகிறது என கூறியுள்ளார்.