கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகர் கமல்ஹாசன் கதர் துணி நிறுவனத்தின் அறிமுகத்திற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பியபோது லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கமல் பூரண குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கமல் நலம்பெற வேண்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, கமல் உடல் நலம்பெற வேண்டியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‛‛நலமாக வர வேண்டும் சகோதரரே... கலை உலகை ஆ..........ஹா............என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்'' என்று பதிவிட்டுள்ளார்.