'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' |
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம். சூர்யா முக்கியத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை(நவ., 2) ஓடிடியில் வெளியாகிறது.
இந்த நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவது தான் சிறந்ததொரு கலைப்படைப்பு. நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞராக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப் படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் ஏராளம் என்று பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து சூர்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப் பூர்வமான பாராட்டு ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவர் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.