துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். குறுகிய வயதில் இவரது அகால மரணம் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் அவர் ஒரு அற்புதமான மனிதர் என சிலாகித்து கூறி வருகிறார்கள். அந்தவகையில் அவருடன் கடந்த 2019ல் வெளியான 'நடசார்வபோவ்மா' என்கிற படத்தில் இணைந்து நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், அவரது மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அந்தப்படத்தில் புனித் - ககன் ஆகவும், அனுபமா - சுருதி ஆகவும் நடித்திருந்தனர். அதை மனதில் வைத்து, “அப்பு சார். ஸ்ருதி எப்போதுமே ககனை மிஸ் பண்ணுகிறாள்... ஆனால் அனுபமா ஒரு நல்ல அன்பான, மரியாதைக்குரிய, அர்ப்பணிவு உணர்வு கொண்ட ஒரு நல்ல மனிதரை இனி மிஸ் பண்ணுவாள்.. உங்களுடைய புன்னகையை எப்படி மறக்க முடியும்.. இன்னும் இந்த உண்மையை ஏற்க மனம் மறுக்கிறது” என கூறியுள்ள அனுபமா, அந்தப்படத்தில் தனக்கு பிடித்த காட்சி ஒன்றையும் அதில் பகிர்ந்துள்ளார்.