வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். குறுகிய வயதில் இவரது அகால மரணம் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் அவர் ஒரு அற்புதமான மனிதர் என சிலாகித்து கூறி வருகிறார்கள். அந்தவகையில் அவருடன் கடந்த 2019ல் வெளியான 'நடசார்வபோவ்மா' என்கிற படத்தில் இணைந்து நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், அவரது மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அந்தப்படத்தில் புனித் - ககன் ஆகவும், அனுபமா - சுருதி ஆகவும் நடித்திருந்தனர். அதை மனதில் வைத்து, “அப்பு சார். ஸ்ருதி எப்போதுமே ககனை மிஸ் பண்ணுகிறாள்... ஆனால் அனுபமா ஒரு நல்ல அன்பான, மரியாதைக்குரிய, அர்ப்பணிவு உணர்வு கொண்ட ஒரு நல்ல மனிதரை இனி மிஸ் பண்ணுவாள்.. உங்களுடைய புன்னகையை எப்படி மறக்க முடியும்.. இன்னும் இந்த உண்மையை ஏற்க மனம் மறுக்கிறது” என கூறியுள்ள அனுபமா, அந்தப்படத்தில் தனக்கு பிடித்த காட்சி ஒன்றையும் அதில் பகிர்ந்துள்ளார்.