தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக படிப்படியாக குறைந்து வருவதால் தமிழகத்தில் திரையரங்குகள் பழையபடி திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 50 சதவீத இருக்கை அனுமதி என்கிற நிலைகள் கூட சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை முன்பு போல உற்சாகமாக கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தது. படமும் மிகப்பெரிய அளவில் வசூலித்து வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி முதல் கேரளாவிலும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கேரள அரசு அறிவிப்பு செய்தது. ஆனால் மலையாள படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியிடுவதற்கு இன்னும் முழுமனதுடன் தயாராகவில்லை. இந்த நிலையில் கேரளாவிலும் டாக்டர் படம் திரையிடப்பட்டு அங்கேயும் ரசிகர்களை வழக்கம் போல தியேட்டர்களை நோக்கி வரவழைத்துள்ளது. டீசன்டான வசூலையும் பெற்று வருவதாக தியேட்டர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இதை பயன்படுத்தி மலையாள திரைப்படங்களும் தியேட்டர்களில் வெளியாவதற்கு இது தான் சரியான தருணம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.