பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக படிப்படியாக குறைந்து வருவதால் தமிழகத்தில் திரையரங்குகள் பழையபடி திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 50 சதவீத இருக்கை அனுமதி என்கிற நிலைகள் கூட சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை முன்பு போல உற்சாகமாக கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தது. படமும் மிகப்பெரிய அளவில் வசூலித்து வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி முதல் கேரளாவிலும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கேரள அரசு அறிவிப்பு செய்தது. ஆனால் மலையாள படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியிடுவதற்கு இன்னும் முழுமனதுடன் தயாராகவில்லை. இந்த நிலையில் கேரளாவிலும் டாக்டர் படம் திரையிடப்பட்டு அங்கேயும் ரசிகர்களை வழக்கம் போல தியேட்டர்களை நோக்கி வரவழைத்துள்ளது. டீசன்டான வசூலையும் பெற்று வருவதாக தியேட்டர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இதை பயன்படுத்தி மலையாள திரைப்படங்களும் தியேட்டர்களில் வெளியாவதற்கு இது தான் சரியான தருணம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.