நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக படிப்படியாக குறைந்து வருவதால் தமிழகத்தில் திரையரங்குகள் பழையபடி திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 50 சதவீத இருக்கை அனுமதி என்கிற நிலைகள் கூட சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை முன்பு போல உற்சாகமாக கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தது. படமும் மிகப்பெரிய அளவில் வசூலித்து வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி முதல் கேரளாவிலும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கேரள அரசு அறிவிப்பு செய்தது. ஆனால் மலையாள படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியிடுவதற்கு இன்னும் முழுமனதுடன் தயாராகவில்லை. இந்த நிலையில் கேரளாவிலும் டாக்டர் படம் திரையிடப்பட்டு அங்கேயும் ரசிகர்களை வழக்கம் போல தியேட்டர்களை நோக்கி வரவழைத்துள்ளது. டீசன்டான வசூலையும் பெற்று வருவதாக தியேட்டர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இதை பயன்படுத்தி மலையாள திரைப்படங்களும் தியேட்டர்களில் வெளியாவதற்கு இது தான் சரியான தருணம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.