புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக படிப்படியாக குறைந்து வருவதால் தமிழகத்தில் திரையரங்குகள் பழையபடி திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 50 சதவீத இருக்கை அனுமதி என்கிற நிலைகள் கூட சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை முன்பு போல உற்சாகமாக கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தது. படமும் மிகப்பெரிய அளவில் வசூலித்து வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி முதல் கேரளாவிலும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கேரள அரசு அறிவிப்பு செய்தது. ஆனால் மலையாள படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியிடுவதற்கு இன்னும் முழுமனதுடன் தயாராகவில்லை. இந்த நிலையில் கேரளாவிலும் டாக்டர் படம் திரையிடப்பட்டு அங்கேயும் ரசிகர்களை வழக்கம் போல தியேட்டர்களை நோக்கி வரவழைத்துள்ளது. டீசன்டான வசூலையும் பெற்று வருவதாக தியேட்டர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இதை பயன்படுத்தி மலையாள திரைப்படங்களும் தியேட்டர்களில் வெளியாவதற்கு இது தான் சரியான தருணம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.