துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர்கள் ஸ்ரீகாந்த், அசோக் ஆகியோர் புதியதோர் படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். ராம ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‛மாய புத்தகம்' என பெயரிட்டுள்ளனர். தேன் படத்தில் நடித்த அபர்ணதி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது ஜெயில் படத்தில் நடித்துள்ளார்.
நாக ஜென்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள இப்படம் குறித்து இயக்குனர் ராம ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ‛நாகப்பாம்புகளில் இருக்கும் ஆன்மாக்கள் மட்டுமே திரும்பத் திரும்ப பிறக்கும், ஒரு ஆன்மாவையும், அது வெவ்வேறு தலைமுறைகளுக்கு இடையே கடந்து செல்லும் கதாபாத்திரங்களையும் சுற்றியே கதை நகர்கிறது.
எனக்கு கிளாசிக்கல் தோற்றம் உள்ள மற்றும் ஆக்ஷனும் செய்யக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். நாகப்பாம்பின் உடல்மொழியை அவர்களின் நடிப்பில் படம்பிடிக்கக்கூடிய நடிகையையும் தேடிக்கொண்டிருந்தேன். நாங்கள் பல நடிகைகளுடன் ஒரு டெஸ்ட் ஷூட் செய்தோம். அதில், அபர்ணதி சிறப்பாக நடித்ததால், அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்தோம்,' என்றார்.