மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் |
தென்னிந்திய நட்சத்திரங்களாக இருந்தாலும் சிலர் மும்பையில் செட்டிலாவது தான் தற்போதைய பேஷனாக உள்ளது. ஏற்கெனவே ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் மும்பையில் செட்டிலாகி உள்ளனர். ராஷ்மிகாக மந்தனா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை மும்பையில் வாங்கினார். தற்போது 'பீஸ்ட்' படக் கதாநாயகி மும்பையில் வீடு வாங்கியுள்ளார்.
அந்த வீட்டில் நடைபெறும் வேலைகளை அவர் மேற்பார்வையிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். “எனது கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பூஜா குடும்பத்தினர் மும்பையில் செட்டிலாகி உள்ளனர். பூஜாவின் அம்மா தான் தற்போது வீட்டின் கட்டிட வேலைகளை மேற்பார்வை செய்து வருகிறாராம்.
பூஜா ஹெக்டே தமிழில் 'பீஸ்ட்' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடிக்கப் போகிறார். தெலுங்கில் நடித்துள்ள 'ராதே ஷ்யாம், ஆச்சார்யா' விரைவில் வெளிவர உள்ளன.