மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியின் அம்மா சாயா தேவி. பல வருடங்களுக்கு முன்பு இவரை விவகாரத்து செய்துவிட்டார் சரத்குமார். அதற்குப் பிறகு நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
தனது அம்மாவை விட்டு அப்பா பிரிந்தாலும் சரத்குமார், ராதிகா குடும்பத்தினருடன் வரலட்சுமி நெருக்கமாகவே இருக்கிறார். நேற்று தனது அம்மா சாயாதேவியின் 60வது பிறந்த தினத்தை நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் கொண்டாடி இருக்கிறார் வரலட்சுமி. தனது தங்கை பூஜாவுடன் சேர்ந்து இந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார் வரலட்சுமி.
இது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்து தனது அம்மாவைப் பற்றிய எமோஷனலான பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “60 வருடங்களாக தியாகங்கள், அன்பு, மறக்க முடியாத பயணம், உங்களை நேசிக்கும் குடும்பம், இன்னும் பல இருக்கிறது, லவ் யூ மம்மி, நான் உணர்வதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆனால், நான் எப்போதும் சொல்வேன், நான் யார் என்பதை உருவாக்கியது நீங்கள்தான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.