கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மூடப்பட்ட தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திறக்கப்பட்டது. இன்றுடன் இரண்டு மாத காலமாகிவிட்டது. கடந்த இரண்டு மாத காலமாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது தமிழக அரசு. நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தீபாவளி வருவதால் நவம்பர் 1 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இதுவரையில் 50 சதவீத இருக்கை அனுமதியிலேயே 'கோடியில் ஒருவன், டாக்டர், அரண்மனை 3' ஆகிய படங்கள் லாபகரமாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் பல படங்களை வெளியிட உள்ளார்கள். வாரத்திற்கு நான்கைந்து படங்களாவது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்றால் அடுத்த இரண்டு மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவும் வாய்ப்புள்ளது.