இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மூடப்பட்ட தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திறக்கப்பட்டது. இன்றுடன் இரண்டு மாத காலமாகிவிட்டது. கடந்த இரண்டு மாத காலமாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது தமிழக அரசு. நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தீபாவளி வருவதால் நவம்பர் 1 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இதுவரையில் 50 சதவீத இருக்கை அனுமதியிலேயே 'கோடியில் ஒருவன், டாக்டர், அரண்மனை 3' ஆகிய படங்கள் லாபகரமாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் பல படங்களை வெளியிட உள்ளார்கள். வாரத்திற்கு நான்கைந்து படங்களாவது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்றால் அடுத்த இரண்டு மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவும் வாய்ப்புள்ளது.