நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதின் ஒரு பகுதியாக ஆன்லைன் சூதாட்ட செயலிகளை (ஆப்) அரசு தடை செய்தது.
இந்த செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர், நடிகையும் விசாரித்து வருகிறார்கள். சூதாட்ட பணத்தில் அவர்கள் சம்பளம் பெற்றிருந்தால் அதுவும் குற்றமாகும் என்கிற அடிப்படையில் அவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
அந்த வகையில் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா, மேற்கு வங்க நடிகை மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.15) விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரத்தேலா தமிழில் சரவணன் நடித்த 'லெஜண்ட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.