மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமதிப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மன்னிப்பு கோரினர்.
தமிழ் சினிமாவில் மயூரி என்ற திரைப்படத்தின் வாயிலாக 1984ல் அறிமுகமானவர் சுதா சந்திரன் 56. பரதநாட்டிய கலைஞரான இவர், 1981ல் நடந்த சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார்.
பிரதமருக்கு கோரிக்கை
அதன்பின், செயற்கை கால் பொருத்தி நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் இவர் நடித்த மயூரி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். ஏராளமான ஹிந்தி மற்றும் தமிழ் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர், வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மும்பை திரும்பினார்.
மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரி, சுதா சந்திரனின் செயற்கை காலை அகற்றி காட்டும்படி கேட்டார். இந்த சம்பவம் குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் நடிகை சுதா சந்திரன், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
![]() |