புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமதிப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மன்னிப்பு கோரினர்.
தமிழ் சினிமாவில் மயூரி என்ற திரைப்படத்தின் வாயிலாக 1984ல் அறிமுகமானவர் சுதா சந்திரன் 56. பரதநாட்டிய கலைஞரான இவர், 1981ல் நடந்த சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார்.
பிரதமருக்கு கோரிக்கை
அதன்பின், செயற்கை கால் பொருத்தி நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் இவர் நடித்த மயூரி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். ஏராளமான ஹிந்தி மற்றும் தமிழ் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர், வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மும்பை திரும்பினார்.
மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரி, சுதா சந்திரனின் செயற்கை காலை அகற்றி காட்டும்படி கேட்டார். இந்த சம்பவம் குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் நடிகை சுதா சந்திரன், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
![]() |