ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
தமிழ் இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். பான்-இந்தியா படமாக உருவாக உள்ள இப்படத்தின் பூஜை கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.
'இந்தியன் 2' படத்தை இன்னும் முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டுத்தான் ராம் சரண் படத்திற்குச் சென்றுள்ளார் ஷங்கர். சமீபத்தில் 'இந்தியன் 2' படத் தயாரிப்பாளரை ஷங்கர் நேரில் சந்தித்துப் பேசி 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பையும் மீண்டும் ஆரம்பிக்கிறேன் என உறுதி அளித்துள்ளார். ஆனால், அவர் அப்படி செய்யாமல் ராம் சரண் படம் இயக்கச் சென்றுவிட்டார். இதனால், 'இந்தியன் 2' தயாரிப்பாளர் கோபமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
எனவே, ராம் சரண் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை புனேவில் வரும் 22ம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை முடித்த பிறகுதான் 'இந்தியன் 2' பக்கம் ஷங்கர் வருவாரா அல்லது இடையில் வருவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.