ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

நாக சைதன்யாவுடனான பிரிவை அறிவித்த சமந்தா சில நாட்களாக ஓய்வில் இருந்தார். மன அமைதிக்காக கோவில்களுக்கு சென்று வந்தார். தற்போது விவாகரத்து தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை தனது வழக்கறிஞரிடம் ஒப்படைத்து விட்டு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை புதுமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. தமிழில் ஒரு புது முயற்சியாக பேண்டஸி ரொமாண்டிக் படமாக , பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.