பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள், மால்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்களை திறக்க தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதன்படி தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
ஊரடங்கு தளர்த்துவதன் ஒரு பகுதியாக தற்போது 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நவம்பர் முதல் தேதியிலிருந்து அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதற்கு ஆந்திர அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஏற்கெனவே தெலுங்கானா மாநிலத்தில் 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கி வருகிறது. தற்போது ஆந்திராவிலும் நேற்று முதல் 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்படுவதால் தெலுங்கு திரையுலகினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.