பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தொண்ணூறுகளில் மலையாள திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ரிஷபாவா. 54 வயதான அவர் நேற்று காலை கொச்சியில் காலமானார். கடந்த சில வருடங்களாகவே சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணத்தை தழுவியுள்ளார். பிரித்விராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொண்ணூறுகளில் அலட்டிக் கொள்ளாத ஹைடெக் வில்லன், டீசன்டாக வில்லத்தனம் காட்டும் அரசியல்வாதி, துரோகம் செய்யும் உயர் போலீஸ் அதிகாரி போன்ற கேரக்டர்களுக்கு இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஆக இருந்தவர் தான் நடிகர் ரிஷபாவா. 1990-ல் வெளியான இன் ஹரிஹர் நகர் படத்தில் முதல் பாகத்தில் இவர் ஏற்று நடித்த ஜான் ஹோனாய் என்கிற கதாபாத்திரம் தான் இவரை ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலப்படுத்தியது.