புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மலையாள நடிகர் பிரித்விராஜும் அவரது அண்ணன் இந்திரஜித்தும் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இவர்களது தந்தை மறைந்த நடிகரான சுகுமாரனும் பிரபல நடிகராக இருந்தவர் தான். பிரித்விராஜின் அம்மா மல்லிகா முன்னாள் நடிகை என்றாலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பை விட்டு ஒதுங்கி மகன்களை வளர்த்து ஆளாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
தற்போது மகன்கள் பெரிய நடிகர்களாக மாறிவிட, தனது கணவரும் மறைந்துவிட்ட நிலையில் மீண்டும் குணச்சித்திர நடிகையாக அரிதாரம் பூசி நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது தனது மகன் பிரித்விராஜ், மோகன்லாலை வைத்து இயக்கி வரும் “ப்ரோ டாடி” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் மல்லிகா சுகுமாரன்.
மிகச்சிறந்த நடிகரையும் என்னுடைய மதிப்பிற்குரிய அம்மாவையும் ஒரே பிரேமில் இயக்கியது மாபெரும் தருணம் என இதுகுறித்து தனது இரட்டிப்பு சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ்.