தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், பஹத் பாசில் - நயன்தாராவை இணைத்து பாட்டு என்கிற படத்தை இயக்கப் போவதாக கடந்த வருடம் அறிவித்தார்.
ஆனால் சில காரணங்களால் பாட்டு படத்தை தள்ளிவைத்து விட்ட அல்போன்ஸ் புத்ரன், பிரித்விராஜூக்காக தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றை அவரிடம் சொல்லி, அவரிடம் சம்மதம் பெற்று அந்தப்படத்தை இயக்கப்போவதாக அறிவித்தும் விட்டார். கதையும் ஹீரோவும் மாறினாலும் நாயகி என்னவோ நயன்தாரா தான்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு கோல்டு என டைட்டில் வைத்துள்ளாராம் அல்போன்ஸ் புத்ரன். தற்போது மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கிவரும் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இந்தப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்திலேயே துவங்க இருக்கிறாராம்.