வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
துபாய் அமீரகம் இந்தியாவில் உள்ள செலிபிரிட்டிகளுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா மூலம் 10 ஆண்டுகள் வரை துபாயை சொந்த நாடு போன்று பாவிக்கலாம். அங்கேயே தங்கி இருக்கலாம், தொழில் செய்யலாம். அதன் பிறகு தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த கோல்டன் விசா முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு சல்மான்கான், ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த வரிசையில் வளரும் இளம் நடிகர் டொவினோ தாமசுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டோவினோ தாமஸ் கூறியிருப்பதாவது: இந்த கவுரவத்தை பெறுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. துபாய் எனது இரண்டாவது தாய் நாடாகும். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் இங்கு வசித்து வருகின்றனர். இந்த விசாவின் சலுகைகள் இணையில்லாதது. என்றார்.
டொவினோ தாமஸ் கடந்த 8 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். பிரபுவின்ட மக்கள் படத்தில் அறிமுகமான அவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ஏபிசிடி, கூதரா, சார்லி, என்ட நின்னு மொய்தீன், 2 பெண்குட்டிகள், மாயநதி, லூசிபர், வைரஸ், பாரன்சிக், கள போன்றவை அவர் நடித்த முக்கிய படங்கள். தமிழில் மாரி 2 படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தார்.