புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
துபாய் அமீரகம் இந்தியாவில் உள்ள செலிபிரிட்டிகளுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா மூலம் 10 ஆண்டுகள் வரை துபாயை சொந்த நாடு போன்று பாவிக்கலாம். அங்கேயே தங்கி இருக்கலாம், தொழில் செய்யலாம். அதன் பிறகு தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த கோல்டன் விசா முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு சல்மான்கான், ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த வரிசையில் வளரும் இளம் நடிகர் டொவினோ தாமசுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டோவினோ தாமஸ் கூறியிருப்பதாவது: இந்த கவுரவத்தை பெறுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. துபாய் எனது இரண்டாவது தாய் நாடாகும். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் இங்கு வசித்து வருகின்றனர். இந்த விசாவின் சலுகைகள் இணையில்லாதது. என்றார்.
டொவினோ தாமஸ் கடந்த 8 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். பிரபுவின்ட மக்கள் படத்தில் அறிமுகமான அவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ஏபிசிடி, கூதரா, சார்லி, என்ட நின்னு மொய்தீன், 2 பெண்குட்டிகள், மாயநதி, லூசிபர், வைரஸ், பாரன்சிக், கள போன்றவை அவர் நடித்த முக்கிய படங்கள். தமிழில் மாரி 2 படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தார்.