டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கேரளாவில் கடந்த ஜூலை-17 முதல் சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனாலும் சில பெரிய படங்கள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு கிளம்பிச் சென்றுவிட்டன. அதேசமயம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டொவினோ தாமஸ் தற்போது சூப்பர் ஹீரோ கதையாக உருவாகி வரும் மின்னல் முரளி என்கிற படத்தில் நடித்து வருகிறார்..
இந்தநிலையில் தற்போது கேரளாவின் தொடுபுழா அருகில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்கி நடத்த ஆரம்பித்தனர். ஆனால் கொரோனா தாக்கம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பகுதி என்பதால், அந்தப்பகுதி மக்கள் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முதலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்த போலீஸார் பின்னர் அதை திரும்ப பெற்றனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கொரோனா முதல் அலை துவங்கியபோதே பாதியில் நின்றது. அந்த சமயத்தில் தான் இந்தப்படத்திற்காக போடப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள சர்ச் செட்டை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




