திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சினிமாவில் நுழைந்த இத்தனை வருடங்களில் நடிகர் துல்கர் சல்மான் தற்போது தான் முதன் முறையாக 'சல்யூட் என்கிற படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. ஆனால் கேரளாவில் படப்பிடிப்பு நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படாததால், மீதி காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி வருகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ரோஷன் ஆண்ட்ரூஸ் முதன்முதலாக இயக்கிய, மோகன்லால் நடித்த உதயநாணுதாரம் படத்தின் படப்பிடிப்பை இங்கேதான் நடத்தினாராம். அதன்பிறகு 17 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தான் மீண்டும் இங்கே படப்பிடிப்பு நடத்துவதற்காக வந்துள்ளாராம். இதனால் ஆர்வத்துடன் ராமோஜிராவ் பிலிம்சிட்டி முன்பாக நின்று புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.