புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
உலகெங்கும் சகோதரர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் பலர் சகோதரர் தின வாழ்த்துக்களையும் பதிவுகளையும் வெளியிட்டாலும், தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சிறுவயது சிரஞ்சீவி தனது கையில் இளைய சகோதரர் நடிகர் பவன் கல்யாணை தூக்கி வைத்தபடி நின்றிருக்க, அருகில் அவர்களது இன்னொரு சகோதரர் நாகபாபு நிற்கிறார். சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த புகைப்படத்தில் பவன் கல்யாணை சிரஞ்சீவி தூக்கி வைத்திருப்பதை பார்க்கும்போது, சினிமாவிலும் அவர் நல்ல உயரத்திற்கு வரவேண்டும் என ஒரு சகோதரனாகவும் அடித்தளமிட்டு தந்ததை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.