ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
உலகெங்கும் சகோதரர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் பலர் சகோதரர் தின வாழ்த்துக்களையும் பதிவுகளையும் வெளியிட்டாலும், தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சிறுவயது சிரஞ்சீவி தனது கையில் இளைய சகோதரர் நடிகர் பவன் கல்யாணை தூக்கி வைத்தபடி நின்றிருக்க, அருகில் அவர்களது இன்னொரு சகோதரர் நாகபாபு நிற்கிறார். சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த புகைப்படத்தில் பவன் கல்யாணை சிரஞ்சீவி தூக்கி வைத்திருப்பதை பார்க்கும்போது, சினிமாவிலும் அவர் நல்ல உயரத்திற்கு வரவேண்டும் என ஒரு சகோதரனாகவும் அடித்தளமிட்டு தந்ததை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.