பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சன்னி வேயோன், ஹனி ரோஸ், ராஜேஸ்வரி பொன்னப்பா நடித்துள்ள மலையாள படம் அக்குவாரியம். இந்த படம் கேரளாவில் வாழும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கையை பற்றியதாகும். இந்த படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்று கேரள கன்னியாஸ்திரிகள் சிலர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது கொரோனா காலம் என்பதாலும், ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் தேவை இல்லை என்பதாலும் படத்தை நாளை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு தடைகேட்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஜெஸ்ஸி மணி என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "இந்த படம் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளை அவதூறாக சித்தரிக்கிறது. அவர்களின் பாலியல் பிரச்சினைகள் பற்றி தவறாக பேசுகிறது. 2013ம் ஆண்டு பிதாவினம் புத்ரானம் பரிசுத்தாதம்வினம் (பிதா சுதன் பரிசுத்த ஆவி) என்ற பெயரில் தயாராகி தணிக்கை சான்று மறுக்கப்பட்ட படம். தற்போது அக்குவாரியம் என்ற பெயரில் ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தற்காலிக தடை விதித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.