பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வக்கீல் சாப் என்கிற படம் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த பட தயாரிப்பாளருக்கு தற்போது ஒரு மொபைல் நம்பரால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கதைப்படி படத்தில் வில்லன் ஆட்களில் ஒருவர், கையில் வைத்திருக்கும் மொபைல் போனுக்கு, அந்த படத்தில் நடித்துள்ள அஞ்சலியின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோ ஒன்று, வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கப்படும்.. அந்த எண் திரையில் காட்டப்படும்போது பார்ப்பவர்களுக்கு பளிச்சென தெரியும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் அந்த தொலைபேசி எண் தனக்குரியது என்றும், அந்த நம்பரை தனது அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தியதால், தொடர்ந்து தனக்கு அருவருக்கத்தக்க வகையில் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதாகவும் பஞ்சகுட்டா பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் சுதாகரின் வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.