துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமா ரசிகர்கள் உணர்ச்சிகரமானவர்கள். தங்கள் அபிமான ஹீரோக்களின் படங்கள் வெளிவரும் போது அவர்கள் கொண்டாடுவதைப் போல வேறு எந்த சினிமா ரசிகர்களும் கொண்டாட மாட்டார்கள். இங்கு கடந்த சில வருடங்களாகத்தான் இந்த அதிகாலைக் காட்சிகள் பிரபலம். ஆனால், தெலுங்குத் திரையுலகத்தில் 30 வருடங்களுக்கு முன்பே அதிகாலைக் காட்சிகள் நடந்தது இங்குள்ள பலருக்குத் தெரியாது.
இன்றைய தெலுங்குத் தயாரிப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் தில் ராஜு. தன்னை பவன் கல்யாணின் தீவிர ரசிகர் என வெளிப்படையாகச் சொன்னவர். பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களைத் தயாரித்த தில் ராஜுவுக்கு இப்போதுதான் பவன் கல்யாணை வைத்து படம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'வக்கீல் சாப்' படத்தை போனிகபூருடன் இணைந்து தயாரித்துள்ளார். இன்று அந்தப் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியில் மற்ற பவன் கல்யாணின் ரசிகர்களைப் போலவே தியேட்டரில் பேப்பர்களைத் தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ காட்சிதான் இன்று தெலுங்குத் திரையுலகத்திலும் ரசிகர்களிடத்திலும் ஹாட் டாபிக்.
தில் ராஜுக்கு மீண்டும் ஒரு பவன் கல்யாண் படம் பார்சேல்ல்ல்.....