வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

கடந்த ஒரு வருடமாக லாக்டவுன் காரணமாக வெளியாகாமல் முடங்கி இருந்த மலையாள படங்கள் தற்போது அடுத்தடுத்து ரிலீசாகி வருகின்றன. அதில் குஞ்சாக்கோவின் படங்கள் தான் அதிகம் ரிலீசாகின்றன என்பது ஆச்சர்யம். கடந்த 20 நாட்களுக்கு முன் இவர் நடித்த மோகன்குமார் பென்ஸ் என்கிற படம் வெளியானது.
அந்தப்படமே இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இன்று குஞ்சாக்கோ நடித்துள்ள 'நாயாட்டு' என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் சராசரி போலீஸ்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஞ்சாக்கோ. துல்கர் சல்மான் நடித்த சார்லி, ஏபிசிடி ஆகிய படங்களை இயக்கிய மார்ட்டின் பரக்கத் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அதேசமயம் நாளை குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள நிழல் என்கிற படமும் வெளியாகிறது. இந்தப்படத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜான் பேபியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். ஆனால் மாஸ்க் அணிந்த ஒரு ராபின் ஹூட் கதாபாத்திரத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பது போல போஸ்டர்களை வெளியிட்டு படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். தவிர இந்தப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.




