கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
கடந்த ஒரு வருடமாக லாக்டவுன் காரணமாக வெளியாகாமல் முடங்கி இருந்த மலையாள படங்கள் தற்போது அடுத்தடுத்து ரிலீசாகி வருகின்றன. அதில் குஞ்சாக்கோவின் படங்கள் தான் அதிகம் ரிலீசாகின்றன என்பது ஆச்சர்யம். கடந்த 20 நாட்களுக்கு முன் இவர் நடித்த மோகன்குமார் பென்ஸ் என்கிற படம் வெளியானது.
அந்தப்படமே இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இன்று குஞ்சாக்கோ நடித்துள்ள 'நாயாட்டு' என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் சராசரி போலீஸ்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஞ்சாக்கோ. துல்கர் சல்மான் நடித்த சார்லி, ஏபிசிடி ஆகிய படங்களை இயக்கிய மார்ட்டின் பரக்கத் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அதேசமயம் நாளை குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள நிழல் என்கிற படமும் வெளியாகிறது. இந்தப்படத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜான் பேபியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். ஆனால் மாஸ்க் அணிந்த ஒரு ராபின் ஹூட் கதாபாத்திரத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பது போல போஸ்டர்களை வெளியிட்டு படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். தவிர இந்தப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.