கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மலையாள திரையுலகில் ஆக்சன் பட இயக்குனர் வரிசையில் முதலிடம் பிடித்தவர் இயக்குனர் ஜோஷி. மோகன்லால், மம்முட்டி என முன்னனி நடிகர்களை மட்டும் வைத்தே, கிட்டத்தட்ட நூறு படங்களை இயக்கிய ஜோஷி, மலையாள சினிமாவின் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து 'டிவென்ட்-20' என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். இந்தநிலையில் ஜோஷியின் மகன் அபிலாஷும் தந்தை வழியில் இயக்குனராக களம் இறங்குகிறார்.
நடிகர் துல்கர் சல்மான் இவரது டைரக்சனில் நடிப்பதுடன், அந்தப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறார். இதற்கு முன்னதாக பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் என்பவரை, கடந்த வருடம் தான் தயாரித்து, நடித்த 'வரனே ஆவிஷ்யமுண்டு'' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தி இருந்தார் துல்கர்.. இயக்குனர்கள் ஜோஷி, சத்யன் அந்திகாடு போன்றவர்கள் எல்லாம் துல்கரின் தந்தையான மம்முட்டியின் ஆரம்ப கால வளர்ச்சியில் அவருக்கு உறுதுணையாக நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.