புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மோகன்லால் நடிப்பில் பிரமாண்ட வரலாற்று படமாக உருவாகியுள்ள படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. இயக்குனர் பிரிதயர்தஷன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் இந்தப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்தப்படத்தை மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் தான் தயாரித்துள்ளார். இந்தப்படத்திற்கு விருது கிடைத்ததை தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் சிலருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். மேலும் இந்த விருதை இந்திய கடற்படைக்கு அர்ப்பணிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மோகன்லால்.
அதற்கு காரணமும் உள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்த குஞ்சாலி மரைக்கார் கடல் அனுபவம் கொண்ட வீரர்களை ஒன்று திரட்டி, கடற்படையை உருவாக்கி, போர்த்துக்கீசியர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். இந்த மரைக்கார் கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடித்துள்ளார்.