இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
கடந்த 2022-ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 என்கிற டைட்டிலுடன் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு துவங்கினார்கள்.
தற்போது கர்நாடகாவில் உள்ள கொல்லூரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த கபில் என்கிற துணை நடிகர் இதில் கலந்துகொண்டு நடித்து வந்தார். தனக்கு காட்சி இல்லாத ஓய்வு நேரத்தில் அருகில் இருந்த கொல்லூர் சவுபர்ணிகா ஆற்றில் குளிப்பதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையும், உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அன்று மாலை அவரது உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது. இவரை தொடர்ந்து தற்காலிகமாக காந்தாரா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன்பும் காந்தாரா படப்பிடிப்பிற்காக ஒரு பேருந்தில் படக்குழுவினர் பயணம் செய்த போது விபத்துக்கு உள்ளான சம்பவமும் நடைபெற்றது. நல்ல வேளையாக அந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.