மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மலையாளத்தில் நடிகர் பிரித்திவிராஜ் லூசிபர் திரைப்படம் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற இன்னொரு வெற்றி படத்தையும் கொடுத்தார். அதன்பிறகு ஏற்கனவே அறிவித்தது போல லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை தற்போது இயக்கி வருகிறார். பல கட்டமாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பரபரப்புக்கு பெயர் போன பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்து மோகன்லால் மட்டும் பிரித்விராஜை சந்தித்து உரையாடியுள்ளார். 2002ல் ஹிந்தியில் ராம்கோபால் வர்மா இயக்கிய கம்பெனி என்கிற படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் இப்போது வரை அவர்களுக்குள் ஒரு நட்பு தொடர்பு வருகிறது என்பதும் பல பேர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
அந்த வகையில் நீண்ட நாட்கள் கழித்து மோகன்லாலை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ள ராம்கோபால் வர்மா. இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “கம்பெனி நினைவுகள்.. ஒன் அண்ட் ஒன்லி மோகன்லாலை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தேன்” என்று கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ராம்கோபால் வர்மாவுடனான இந்த சந்திப்பு பிரித்விராஜுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியே. இது குறித்து பிரித்விராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு இயக்குனரும் மாடர்ன் இந்திய சினிமாவை பார்த்து தான் வளர்ந்து இருக்கிறார்கள். நானும் அப்படித்தான் யாரை ஒரு லெஜெண்ட் என நினைத்தேனோ அப்படிப்பட்ட உங்களை பார்த்து தான்.. கேமராவையே ஒரு கதை சொல்லும் கருவியாக பயன்படுத்தும் வித்தையை உங்களிடம் தான் பார்த்தேன். உங்களுடைய பல படங்கள் சினிமாவில் அழுத்தமான முத்திரை பதித்தவை. நீங்கள் எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் கலை மற்றும் சினிமா குறித்து நீண்ட நேரம் உரையாடியதும் நாங்கள் செய்த பாக்கியம். மீண்டும் அந்த பழைய விண்டேஜ் அண்டர்வேர்ல்ட் ராம் கோபால் வர்மாவின் கம் பேக்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.