ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
மலையாளத் திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் மறைந்த பிரபல மூத்த நடிகரான பாலாஜியின் மகள் சுசித்ராவை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு விஸ்மாயா என்கிற மகளும் பிரணவ் என்கிற மகளும் இருக்கின்றனர். இதில் பிரணவ் மோகன்லால் கடந்த சில வருடங்களாக ஒரு நடிகராக தனது பயணத்தை தொடங்கி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் குறித்து இதுவரை தான் கூறாத சில விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார் அவரது மனைவி சுசித்ரா.
இது பற்றி அவர் கூறும்போது, “மோகன்லால் நடித்த முதல் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்திலிருந்து அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு குடும்ப திருமண நிகழ்வு ஒன்றில் தான் அவரை முதன் முதலில் நேரில் சந்தித்தேன். அதன் பிறகு அவருக்கே தெரியாமல் தினசரி ஐந்து போஸ்ட் கார்டுகள் அவருக்கு தொடர்ந்து என் பெயர் குறிப்பிடாமல் அனுப்பி வந்தேன். ஒரு கட்டத்தில் அது நான்தான் என அவர் கண்டுபிடித்து விட்டார். எனக்கு திருமணம் என்கிற பேச்சு வந்தபோது மோகன்லாலை நான் விரும்புவதாக வீட்டாரிடம் கூறினேன். என் தந்தை தனது நெருங்கிய நட்பில் இருந்த நடிகை சுகுமாரி மூலமாக இந்த விஷயத்தை மோகன்லாலிடம் தெரிவித்து அதை வெற்றிகரமாக எங்களது திருமணத்தில் முடித்து வைத்தார். வீட்டைப் பொறுத்தவரை அவரை சுந்தர குட்டப்பன் (அழகான பையன்) என்றுதான் செல்லமாக குறிப்பிடுவார்கள். இது அவருக்கே தெரியுமா என்று கூட எனக்கு தெரியாது,'' எனக் கூறியுள்ளார் சுசித்ரா.