மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலைசெய்த வழக்கில் கைதாகி 100 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்து 6 வாரங்கள் இடைக்கால ஜாமின் பெற்று வீடு திரும்பியுள்ளார் தர்ஷன்.
இந்தநிலையில் கன்னட தொலைக்காட்சி நடிகரும் தற்போது நடந்து கொண்டிருக்கும் கன்னட பிக் பாஸ் சீசன் 11ல் பங்கேற்று சமீபத்தில் எவிக்ட் ஆன போட்டியாளருமான வழக்கறிஞர் ஜெகதீஷ் என்பவர் தர்ஷன் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் ஜெகதீஷ் கூறும்போது, “நான் நடிகர் தர்ஷனை விமர்சித்து பேசியதற்காக அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்த நிலையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது தான் அதிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்துள்ளேன். தர்ஷனின் ரசிகர்கள் மீண்டும் என்னை தாக்க முயற்சிக்கலாம். இதன் பின்னணிகள் தர்ஷன் தான் தூண்டுகோலாக இருந்து செயல்படுகிறார். அதனால் அவர்களிடம் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கொலை மிரட்டல் விடுத்த தர்ஷன் ரசிகர்கள் மற்றும் அவரது பின்னணியில் இருக்கும் தர்ஷன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.