'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
ஹிந்தியில் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் உள்ள நான்கு மொழிகளிலும் மிகச் சிறப்பான வரவேற்பு பெற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கமல், நாகார்ஜுனா, மோகன்லால், கிச்சா சுதீப் என ஒவ்வொரு மொழியிலும் இருந்து திரையுலக ஜாம்பவான்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்ததால் இந்த நிகழ்ச்சிக்கென கூடுதல் பார்வையாளர்களும் கிடைத்துள்ளார்கள். அந்த வகையில் தமிழில் இந்த நிகழ்ச்சி துவங்கியபோது இதனை தொகுத்து வழங்க ஆரம்பித்த கமல்ஹாசன் தனது அணுகுமுறையால் ரசிகர்களை கவர்ந்து கடந்த ஏழு சீசன்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது எட்டாவது சீசன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தனக்கான வேறு பணிகள் இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து விடைபெற்று ஒதுங்கினார் கமல். தற்போது நடிகர் விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதே போல கன்னடத்தில் கடந்த 2013ல் இருந்து தொடர்ந்து பத்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கிச்சா சுதீப். அவரும் இந்த சீசனுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடை பெற்று கிளம்பும் முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளிப்படையாகவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதில் அவர் கூறும்போது, “பிக்பாஸ் நிகழ்ச்சி 11வது சீசனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மிகப்பெரிய ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சிக்கும் எனக்கும் உங்களிடமிருந்து மிகப்பெரிய அளவில் அன்பு கிடைத்தது. பத்து வருடங்களுக்கு மேலாக இப்படி ஒன்றாக பயணித்த எனக்கு தற்போது இதிலிருந்து நகர்ந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இதுதான் நான் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்கும். என்னுடைய இந்த முடிவுக்கு கலர்ஸ் தொலைக்காட்சியும் இத்தனை வருடங்களாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் நீங்களும் மிகப்பெரிய மதிப்பு கொடுப்பீர்கள் என நான் உண்மையிலேயே நம்புகிறேன். அதனால் இந்த சீசனை மிகச் சிறப்பானதாக மாற்றுவோம். நானும் என்னால் முடிந்த வகையில் உங்களை பொழுதுபோக்க செய்வேன்” என்று கூறியுள்ளார்.