32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதீப் பல வருடங்களுக்கு முன்பே தென்னிந்திய அளவில் மட்டுமல்லது பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராக மாறியவர். குறிப்பாக ராஜமவுலியின் 'நான் ஈ' திரைப்படம் அவரை மிகப்பெரிய அளவிற்கு கொண்டு சென்றது. அதன் பிறகு கிடைத்த புகழால் தற்போதுவரை கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 10 வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார் சுதீப்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் சரோஜா சஞ்சீவ் காலமானார். தன் தாய் மீது மிகுந்த பாசம் கொண்ட கிச்சா சுதீப்புக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி தான். தற்போது சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' என்கிற திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சுதீப் தனது தாயார் குறித்து நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது, “தினசரி என் அம்மாவிடம் ஏதாவது பேசி விடுவேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நான் அணியும் விதவிதமான உடைகளை அணிந்து கண்ணாடி முன் நின்று புகைப்படம் எடுத்து அதை என் அம்மாவுக்கு அனுப்பி வைப்பேன். அது அவ்வளவு ஆர்வமாக இருக்கும். அவரும் அதை பார்த்து விட்டு பாராட்டியோ கிண்டலாகவோ எதோ ஒன்று சொல்வார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு எனக்கு அப்படி விதவிதமான ஆடைகளை அணிவதே பிடிக்கவில்லை. அதன் பிறகு இரண்டு மூன்று எபிசோடுகளில் சாதாரணமான குர்தா மட்டுமே அணிந்தேன்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் என்னை எதிர்பார்த்து காத்திருக்கும் பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும். என்னுடைய பர்சனல் விஷயங்களுக்காக அவர்களை ஏமாற்ற கூடாது என நினைத்து மீண்டும் பழையபடியே பிக்பாஸுக்கான உடைகளை அணியை துவங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார் சுதீப்.