மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட முன்னணி நடிகர் பிரித்விராஜ். தனது லட்சிய கனவான டைரக்சன் துறையிலும் அடி எடுத்து வைத்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகர் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரை வைத்தே ப்ரோ டாடி படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் படத்தையும் இயக்கி முடித்து விட்டார். முதல் பாகத்தைப் போல இந்த இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக உருவாகியுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மோகன்லால்.
மேலும் பிரித்விராஜுடன் தான் பணிபுரிந்த அனுபவம் குறித்து மோகன்லால் கூறும்போது, “பிரித்விராஜ் ஒரு அற்புதமான இயக்குனர். அவருக்கு எல்லாவித சாதனங்களும், லென்ஸ்களும், நடிகர்களும், அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதும் நன்றாகவே தெரியும். தான் நினைத்தது வரும் வரை எந்த ஒரு நடிகரையும் விட மாட்டார், அவருடன் பணியாற்றுவது கொஞ்சம் கடினம் தான், நாம் நல்ல நடிகராச்சே என்கிற ஈகோ எல்லாம் அவரிடம் செல்லுபடி ஆகாது, அவரிடத்தில் நீங்கள் எப்படியும் உங்களை சரண்டர் பண்ணிக் கொண்டால்தான் சிறப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.