மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன் தனது காதலியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் செய்து வரும் அவர் முதலில் தான் அடைக்கப்பட்டிருந்த பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடாக பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இன்னொரு பக்கம் தொடர்ந்து தனக்கு ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார் தர்ஷன். ஏற்கனவே அவரது ஜாமீன் மனுக்கள் சிலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பெங்களூரு நீதிமன்றம் அவர் கடைசியாக விண்ணப்பித்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை கடந்த மாதம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் தள்ளி வைத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த மனுவின் மீதான விசாரணை வந்த போது மீண்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவிட்டுள்ளது பெங்களூரு நீதிமன்றம். அதே சமயம் தர்ஷன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்கிற ஒரு ஆறுதலான தகவலையும் அதில் தெரிவித்துள்ளது.