அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன் தனது காதலியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் செய்து வரும் அவர் முதலில் தான் அடைக்கப்பட்டிருந்த பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடாக பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இன்னொரு பக்கம் தொடர்ந்து தனக்கு ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார் தர்ஷன். ஏற்கனவே அவரது ஜாமீன் மனுக்கள் சிலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பெங்களூரு நீதிமன்றம் அவர் கடைசியாக விண்ணப்பித்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை கடந்த மாதம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் தள்ளி வைத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த மனுவின் மீதான விசாரணை வந்த போது மீண்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவிட்டுள்ளது பெங்களூரு நீதிமன்றம். அதே சமயம் தர்ஷன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்கிற ஒரு ஆறுதலான தகவலையும் அதில் தெரிவித்துள்ளது.