நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் |
நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் கலந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் எப்-2. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் எப்-3 என்கிற பெயரில் வெளியாகி அதுவும் ஓரளவு வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களையும் பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக தற்போது புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ராணா வில்லனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் பாலகிருஷ்ணா திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்து படக்ழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் இதற்கு அருகிலேயே நடந்து வருவதால் தனக்கு கிடைத்த இடைவெளி நேரத்தில் அவர் தனது நண்பரான வெங்கடேஷின் படப்பிடிப்பி தளத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.